மாண்டஸ் புயல் எதிரொலி: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை...!


மாண்டஸ் புயல் எதிரொலி: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை...!
x

வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியமும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர்,

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு முதல் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலின் வேகம் மேலும் குறைந்துள்ளது.

இன்று அதிகாலை மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது மணிக்கு 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு - தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவிலும் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியமும், நாளையும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story