பொலிவிழந்த மாமல்லபுரம் புராதன சின்னங்கள்.. 3 ஆண்டுகளுக்கு பின் பராமரிப்பு பணி தொடக்கம்


பொலிவிழந்த மாமல்லபுரம் புராதன சின்னங்கள்.. 3 ஆண்டுகளுக்கு பின் பராமரிப்பு பணி தொடக்கம்
x

மாமல்லபுரம் புராதன சின்னங்களின் தூய்மை பராமரிப்பு பணிகளை தொல்லியல் துறை நிதி ஒதுக்கி 3 ஆண்டுக்கு பிறகு தொடங்கி உள்ளது.

செங்கல்பட்டு

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், ஐந்துரதம் சிறப்பு பெற்றது. இதில் உள்ள சிற்பங்களில் கடல் காற்று உப்பு, மழையால் ஏற்படும் பாசி, காற்றில் உருவாகும் மண் தூசி, வாகனப்புகை, பறவைகள் எச்சம் உள்ளிட்ட மாசு படிந்து காணப்படுகிறது.

சிற்பங்களில் உள்ள மாசுக்களை படிமங்களை தொல்லியல் துறை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ரசாயனம் பூசி சுத்தம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா கட்டுப்பாடு, ஊரடங்கு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சிற்பங்கள் தூய்மை பராமரிப்பு பணிகள் செய்யாமல் பொலிவிழந்து காணப்பட்டது. '

சமீபத்தில் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிறகு மாமல்லபுரம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட வருடந்தோறும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வருவர்.

இதனால் புராதன சின்னங்களின் தூய்மை பராமரிப்பு பணிகளை விரைவாக செய்து முடிக்க தொல்லியல் துறை நிதி ஒதுக்கி 3 ஆண்டுக்கு பிறகு தற்போது பணிகளை தொடங்கி உள்ளது.


Next Story