சாராயம் கடத்தியவர் கைது


சாராயம் கடத்தியவர் கைது
x

மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அங்குள்ள அழகம்மாள் கோவில் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அவர் புதுச்சேரி மாநில 40 சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 38) என்பதும், இவர் புதுச்சேரி மாநிலத்திலிருந்து சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்து அரகண்டநல்லூர் வரை சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த சாராய பாக்கெட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story