சாராயம் பதுக்கியவர் கைது


சாராயம் பதுக்கியவர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2023 5:21 PM GMT (Updated: 15 Jun 2023 10:07 AM GMT)

சாராயம் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

சாராயம் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் இரும்பிலி கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது காவாங்கரை பகுதியில் 2 லாரி டியூப்களில் 60 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்த செல்வதுரை (வயது 40) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இது சம்பந்தமாக செல்வதுரை மீது கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story