தந்தையை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை


தந்தையை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை
x

தந்தையை வெட்டிக்கொன்ற தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியை சேர்ந்த லட்சுமண பெருமாள் மகன் குருவையா (வயது 42). கூலி தொழிலாளி. இவர் தனக்கு சொத்து வழங்க கோரி லட்சுமண பெருமாளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் லட்சுமண பெருமாள் சொத்தை பிரித்துக் கொடுக்காததால் ஆத்திரமடைந்த குருவையா கடந்த 7.5.2020 அன்று அரிவாளை கொண்டு வெட்டி லட்சுமண பெருமாளை கொலை செய்தார். இந்த சம்பவம் தொடா்பாக சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருவையாவை கைது செய்தனர்.இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி கஜரா விசாரித்து குருவையாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story