தங்கும் விடுதிகளில் கட்டண விவரங்களை வைக்காவிட்டால் உரிமம் ரத்து-கீழக்கரை தாசில்தார் எச்சரிக்கை


தங்கும் விடுதிகளில் கட்டண விவரங்களை வைக்காவிட்டால் உரிமம் ரத்து-கீழக்கரை தாசில்தார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Jun 2023 6:45 PM GMT (Updated: 3 Jun 2023 6:46 PM GMT)

தங்கும் விடுதிகளில் கட்டண விவரங்களை வைக்காவிட்டால் உரிமம் ரத்து-கீழக்கரை தாசில்தார் எச்சரிக்கை

ராமநாதபுரம்

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் தற்போது சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் தர்காவிற்கு வந்து தங்கி இருந்து நேர்த்திகடன்களை செலுத்தி விட்டு செல்கின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில தனியார் தங்கும் விடுதிகளில் மற்ற நாட்களை விட பல மடங்கு அதிகம் கட்டணம் வசூல் செய்து வருவதாக கீழக்கரை தாசில்தாரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அதைத்தொடர்ந்து கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் ஏர்வாடி தர்காவில் உள்ள அனைத்து தனியார் தங்கும் விடுதிகளுக்கு சென்று அங்குள்ள பதிவு புத்தகத்தை எடுத்து சோதனை செய்தார். அப்போது தங்கும் விடுதிகளில் பார்வைக்கு தெரியும் அளவிற்கு கட்டண பட்டியல் வைக்க வேண்டும் , பணம் வாங்கிய பிறகு பயணிகளுக்கு ரசீது வழங்க வேண்டும், கூடுதல் பணம் வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும், .தவறும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று விடுதி உரிமையாளர்களை எச்சரித்தார். அப்போது மண்டல துணை தாசில்தார் பரமசிவம், ஏர்வாடி தர்கா கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன், கிராம உதவியாளர் கோவிந்தன் மற்றும் திருமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story