அனுமதியற்ற மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த இறுதி வாய்ப்பு- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்


அனுமதியற்ற மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த இறுதி வாய்ப்பு- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
x

மதுரை மாவட்டத்தில் அனுமதியற்ற மனை பிரிவுகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்தி கொள்ளலாம் என்று நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் மஞ்சு தெரிவித்துள்ளார்.

மதுரை


மதுரை மாவட்டத்தில் அனுமதியற்ற மனை பிரிவுகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்தி கொள்ளலாம் என்று நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் மஞ்சு தெரிவித்துள்ளார்.

வரன்முறைப்படுத்த

தமிழகத்தின் எந்தவொரு அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு, அதற்கான விற்பனை பத்திரம் 20-10-2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டு இருந்தால், அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி 6 மாத காலம் அவகாசம் வழங்கி அரசு உத்தரவிட்டது.

அதன்பின் தொடர்ந்து அதற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது மீண்டும் இறுதி வாய்ப்பாக தமிழக அரசு கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டு உள்ளது. எனவே இந்த வாய்ப்பை மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பெ.கோ.மஞ்சு கேட்டு கொண்டு உள்ளார்.

திட்டம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அனுமதியற்ற மற்றும் மனைப்பிரிவு மனைகளை வரன்முறைப்படுத்த தமிழக அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தி கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம்...

அதற்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு அடுத்த ஆண்டு (2024) ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ந் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான அரசாணை கடந்த 4-ந் தேதி அன்று வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை எண்-118 மூலம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மனையை வரன்முறைப்படுத்த விரும்புபவர்கள், www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பபதிவு செய்து கொள்ளலாம்.

அதனால் எஞ்சிய மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story