தென்பெண்ணை ஆற்றில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி
திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
தென்பெண்ணையாற்றின் புனிதம் பாதுகாக்கப்பட வேண்டும், ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் மற்றும் நதி நீர் பாதுகாப்பை வலியுறுத்தி அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் சார்பில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட சன்னியாசிகளும், அரகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்களும் கலந்து கொண்டு ஆற்றில் மகா தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியில் அரகண்டநல்லூர்
பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஏ.வி.கணேசன், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி ராமமூர்த்தி, அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலின் சிவ தொண்டர்கள் குழுவின் நிர்வாகி தமிழ்ச்செல்வன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story