காந்தி சிலை அமைக்க வேண்டும் லால்குடி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்


காந்தி சிலை அமைக்க வேண்டும் லால்குடி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
x

காந்தி சிலை அமைக்க வேண்டும் என்று லால்குடி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி

லால்குடி, ஆக.31-

லால்குடி நகராட்சி கூட்டம் அதன் தலைவர் துரைமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சுகுணா ராஜ்மோகன், ஆணையர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் லால்குடியில் இருந்த காந்தி சிலை ரவுண்டானா அமைக்கும் பணிக்காக அகற்றப்பட்டது. தற்போது, ரவுண்டானா பணிகள் முடிந்து வருடங்கள் கடந்தும் காந்தி சிலை அமைக்கப்படவில்லை. எனவே காந்தி சிலையை விரைவில் அமைக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.


Next Story