லாரி மோதி தொழிலாளி பலி


லாரி மோதி தொழிலாளி பலி
x

கூத்தாநல்லூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார்

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள கொத்தங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் சிவதாஸ் (வயது 56). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் கொத்தங்குடியிலிருந்து வடபாதிமங்கலம் சாலையில் காடுவெட்டி அருகே உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது வடபாதிமங்கலத்தில் இருந்து கூத்தாநல்லூர் நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சிவதாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







Next Story