லாரி மோதி தொழிலாளி பலி


லாரி மோதி தொழிலாளி பலி
x

திமிரியில் லாரி மோதி தொழிலாளி பலியானார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த நம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 45), கூலித் தொழிலாளி. இவர் மோட்டார்சைக்கிளில் ஆற்காடு சென்றுள்ளார். அங்கு வேலையை முடித்துக் கொண்டு திமிரிக்கு திரும்பி சென்றார். திமிரி பஸ் நிலையம் அருகே சென்றபோது ஆரணியில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த லாரி, ராமு ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story