தாழக்குடியில் கால்வாயில் பிணமாக மிதந்த தொழிலாளி போலீசார் விசாரணை


தாழக்குடியில் கால்வாயில் பிணமாக மிதந்த தொழிலாளி போலீசார் விசாரணை
x

தாழக்குடி அருகே கால்வாயில் தொழிலாளி பிணமாக மிதந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

தாழக்குடி அருகே கால்வாயில் தொழிலாளி பிணமாக மிதந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கால்வாயில் பிணம்

தாழக்குடி அருகே உள்ள வேம்பத்தூர் சுடுகாடு பகுதியில் நேற்று மாலையில் கால்வாயில் ஒரு ஆண் பிணம் மிதந்து வந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது பிணமாக மிதந்தவர் தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கனகமூலம் புதுகுடியிருப்பை சேர்ந்தவர் பாலையா (வயது47) கூலி தொழிலாளி என்பது தெரிய வந்தது. இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை.

இதனால் நேற்று காலையில் அவரை மனைவி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது, அந்த ்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே என். பி .கால்வாய் கரையோரம் படுத்திருந்ததை சிலர் பார்த்ததாக கூறினர்.

தீயணைப்பு வீரர்கள்

இதைதொடர்ந்து அவர் ஆற்றில் விழுந்திருக்கலாம் என கருதி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேடினர். இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் அவர் படுத்திருந்த இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் வேம்பத்தூர் சுடுகாடு பக்கம் அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து உடலை போலீசார் ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலையா மது போதையில் கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த பாலையாவுக்கு கனி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

---


Next Story