எடப்பாடி அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி


எடப்பாடி அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x

எடப்பாடி அருகே கிணற்றில் மூழ்கிய தொழிலாளி பலியானார்.

சேலம்

எடப்பாடி:

கூலி தொழிலாளி

எடப்பாடியை அடுத்த சித்தூர் மேல்காடு பகுதியை சேர்ந்தவர் அம்மாசி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான அய்யர் (வயது 47) என்பவர் நேற்று காலையில் குளித்துக் கொண்டிருந்தார். கிணற்றின் மேல் பகுதியில் இருந்து அவர், குதித்து குளித்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்படி குதித்த போது தண்ணீரில் மூழ்கிய அவர், நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். கிணற்றில் தண்ணீர் அதிக அளவு இருந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

உடல் மீட்பு

இதுகுறித்து எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். தண்ணீரில் மூழ்கிய அய்யரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆகியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரும், தீயணைப்பு நிலைய வீரர்களும் அய்யரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகு தொழிலாளி அய்யரின் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். இதையடுத்து தொழிலாளியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story