ஊருணியில் தொழிலாளி பிணம்


ஊருணியில் தொழிலாளி பிணம்
x

ராஜபாளையம் அருகே ஊருணியில் தொழிலாளி பிணம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே ஊருணியில் தொழிலாளி பிணம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊருணியில் ஆண் பிணம்

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் முதலியார் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 37). கூலி ெதாழிலாளி. இவருக்கு குரு பாக்கியம் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் குரு பாக்கியம் வெளியூர் சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்ப வந்த போது மாரிமுத்து வீட்டில் இல்லை. இதையடுத்து அவரை பல இடங்களில் தேடினர்.

இதற்கிடையே செட்டியார் பட்டி ஊருணியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் மிதப்பதாக தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கொலையா?

இதுகுறித்த தகவல் அறிந்த ராஜபாளையம் தீயணைப்புத்துறையினர் விைரந்து வந்து உடலை மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மீட்கப்பட்ட உடல் மாரிமுத்து தான் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மாரிமுத்துவின் உடலை பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாரிமுத்து ஊருணியில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்து ஊருணியில் வீசி சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story