அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கரூர்

லாலாபேட்டை அருகே உள்ள மகிளிப்பட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி லாலாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து வந்தனர். பின்னர் யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன.

நேற்று காலை சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் மகிளிப்பட்டி, புணாவசிப்பட்டி, லாலாபேட்டை, சந்தப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story