சோதனை சாவடிகளில் திறமையாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு


சோதனை சாவடிகளில் திறமையாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு
x

சோதனை சாவடிகளில் திறமையாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் திறமையாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார்.

தற்காலிக சோதனை சாவடி

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது.

இதனால் கிராம பகுதிகளில் சாராய விற்பனை நடந்து வந்தது. இதனை கண்காணித்து மது குற்றங்களை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் 8 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டன.

போலீசாருக்கு பாராட்டு

இங்கிருந்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான சாராயம், மதுபாட்டில் கடத்துபவர்களை கைது செய்து, அவர்களின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த தற்காலிக சோதனை சாவடிகளில் திறமையாக பணியாற்றிய போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பாராட்டினார். மேலும் திறமையை ஊக்குவிக்கும் விதமாக பரிசும் வழங்கினார்.


Next Story