4 கோவில்களில் குடமுழுக்கு


4 கோவில்களில் குடமுழுக்கு
x

4 கோவில்களில் குடமுழுக்கு

நாகப்பட்டினம்

திருமருகல் ஊராட்சி மேலக்கரையிருப்பில் உள்ள செவிசாய்த்த விநாயகர், செங்கழனியப்ப அய்யனார் மகா சாஸ்தா, பத்ரகாளியம்மன், கைலாசநாதர் ஆகிய 4 கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த மே மாதம் 29-ந்தேதி தனபூஜை, வாஸ்து சாந்தி நடைபெற்றது. 30-ந்தேதி கணபதி ஹோமம், நவகிரக ஹோமமும், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 31-ந்தேதி 2,3-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து 4-ம் கால யாகசாலை, கடங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர் செவிசாய்த்த விநாயகர் கோவில் குடமுழுக்கும், கைலாசநாதர் கோவில் குடமுழுக்கும், பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கும், செங்கழனியப்பர் மகா சாஸ்தா கோவில் குடமுழுக்கும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story