முருகன் கோவில்களில் கிருத்திகை பூஜை


முருகன் கோவில்களில் கிருத்திகை பூஜை
x
தினத்தந்தி 22 April 2023 6:29 PM GMT (Updated: 22 April 2023 7:06 PM GMT)

முருகன் கோவில்களில் கிருத்திகை பூஜை நடந்தது.

கரூர்

வெள்ளியணை அருகே காணியாளம்பட்டி காணிகளத்தூர் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு இளநீா், பன்னீா், பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் செல்லாண்டிபட்டி. வெள்ளியணை, ஜெகதாபி மற்றும் சுற்று பகுதியில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story