புதுக்கோட்டை அ.தி.மு.க.வின் கோட்டை-எடப்பாடி பழனிசாமி பேச்சு


புதுக்கோட்டை அ.தி.மு.க.வின் கோட்டை-எடப்பாடி பழனிசாமி பேச்சு
x

புதுக்கோட்டை அ.தி.மு.க.வின் கோட்டை என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

புதுக்கோட்டை

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சிவகங்கையில் இருந்து திருச்சிக்கு புதுக்கோட்டை வழியாக காரில் சென்றார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரான பின்பு புதுக்கோட்டை வழியாக சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கட்டியாவயலில் வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கரகம், மயிலாட்டம், குதிரை, தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை பெற்றபின் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் "புதுக்கோட்டை என்றும் அ.தி.மு.க. கோட்டை என நிரூபித்துள்ளீர்கள். இரவிலும் இங்கு திரளாக வந்து எனக்கு வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். அதன் பின்னர் அவர் காரில் திருச்சி விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார்.


Next Story