கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ஈரோடு
கடத்தூர்
கோபி அருகே உள்ள கொடிவேரி அணை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமாகும். ஞாயிறு மற்றும் மற்ற விடுமுறை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தடுப்பணையில் அருவிபோல் கொட்டும் தண்ணீரில் ஆனந்தமாய் குளித்துவிட்டு, கரையில் விற்கும் சூடான பொரித்த மீன்களை வாங்கி சுவைப்பார்கள்.
இந்தநிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் நேற்று கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது.
Related Tags :
Next Story