ெகாடிவேரி அணையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கான்கிரீட் தளங்கள்- சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை


ெகாடிவேரி அணையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கான்கிரீட் தளங்கள்- சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
x

கொடிவேரி அணையில் வெள்ளத்தில் கான்கிரீட் தளங்கள் அடித்து செல்லப்பட்டது. விரைவில் கான்கிரீட் தளங்களை அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு

கடத்தூர்

கொடிவேரி அணையில் வெள்ளத்தில் கான்கிரீட் தளங்கள் அடித்து செல்லப்பட்டது. விரைவில் கான்கிரீட் தளங்களை அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கான்கிரீட் தளம் அமைப்பு

கோபி அருகே உள்ள பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணை கட்டப்பட்டது. இங்கு அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்துவிட்டு செல்வார்கள்.

இந்த நிலையில் கொடிவேரி அணைக்கு சுற்றுலா வருபவர்கள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் அணையின் கீழ் பகுதியில் ஆழமுள்ள இடங்களில் சுமார் 100 மீட்டர் சுற்றளவில் கான்கிரீட் தளம் போட்டு் பாதுகாப்பாக குளிக்க தடுப்பு கம்பிகள் அமைத்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு குளித்து வந்தனர்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது

கான்கிரீட் தளம் போடப்பட்டதால் உயிர் பலி தடுக்கப்பட்டதுடன், சுற்றுலா பயணிகள் பயமின்றி அணையில் குளித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு வந்த 25 ஆயிரம் கன அடி உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது

இதனால் கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அணையில் போடப்பட்ட கான்கிரீட் தளம் முற்றிலும் அடித்து செல்லப்பட்டு அந்த இடத்தில் மீண்டும் குழிகள் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் கோரிக்கை

தற்போது அணையில் ஆங்காங்கே உடைந்த கான்கிரீட் தளங்களும், கம்பிகளும் உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்கி குளிக்க முடியாத நிலையில் கரையில் நின்று குளித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கான்கிரீட் தளங்களை நவீன எந்திரங்களைக் கொண்டு பொதுப்பணித்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி விரைவில் அப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story