கோடநாடு வழக்கு: சிபிஐ விசாரணை கோர உள்ளோம் - எடப்பாடி பழனிசாமி


கோடநாடு வழக்கு: சிபிஐ விசாரணை கோர உள்ளோம் - எடப்பாடி பழனிசாமி
x

கோடநாடு வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை கோர உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

சட்டப்பேரவை நிகழ்வுகள் இன்று கேள்வி நேரத்துடன் தொடங்கின. இதனைத் தொடர்ந்து காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி மற்றும் கொடநாடு விவகாரங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றன.

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். கோடநாடு வழக்கில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக அரசு. 90% வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கோடநாடு வழக்கை எதற்காக சிபிசிஐடிக்கு மாற்றினீர்கள்?

கோடநாடு பங்களா ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா இல்லை. அது வேறு ஒருவருடையது. முதல்-அமைச்சரின் பதில் விசித்திரமாக உள்ளது. கோடநாடு பங்களா யாருடையது என்பதை விசாரித்து கொள்ளுங்கள். கோடநாடு வழக்கை வைத்து எங்களை பயமுறுத்த முடியாது; மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை." என்று கூறினார்.

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது திமுக அரசு தான் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.


Next Story