கோடநாடு வழக்கு: ஊட்டி கோர்ட்டில் இடைக்கால அறிக்கை இன்று தாக்கல்?


கோடநாடு வழக்கு: ஊட்டி கோர்ட்டில் இடைக்கால அறிக்கை இன்று தாக்கல்?
x

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது.

இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு ஊட்டி கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது வழக்கு தொடர்பாக இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 12-ம் தேதி கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா, சசிகலா அறைகளில் நடத்திய ஆய்வு அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story