மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் இறுதிக்கட்ட கலந்தாய்வு


மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் இறுதிக்கட்ட கலந்தாய்வு
x
தினத்தந்தி 7 Oct 2023 6:45 PM GMT (Updated: 7 Oct 2023 6:45 PM GMT)

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலை கல்லூரியில் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். படிப்புகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு 2 நாட்கள் நடக்கிறது

சிவகங்கை

.இறுதிக்கட்ட கலந்தாய்வு

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலை கல்லூரி முதல்வர் துரையரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலை கல்லூரியில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.காம் மற்றும் எம்.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், ஆகிய பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் சேர்க்கையில் காலியாக உள்ள இடங்களுக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வு நாளை(திங்கட்கிழமை) அன்றும், விண்ணப்பிக்காதவர்களுக்கு 10-ந் தேதி காலை 9 மணிக்கும் நடைபெற உள்ளது.

சேர்க்கை கட்டணம்

மாணவ-மாணவிகள் தங்களுக்கு உரிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் இரண்டு நகல்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். சேர்க்கை கட்டணமாக எம்.ஏ., எம்.காம். மாணவர்கள் ரூ.ஆயிரமும், எம்.எஸ்சி. மாணவர்கள் ரூ.1020-ம், எம்.எஸ்சி. கணினி அறிவியல் மாணவர்கள் ரூ.1520-ம் செலுத்த வேண்டும்.

அழகப்பா பல்கலைக்கழகம் தவிர்த்த பிற பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளில் படித்த மாணவர்கள் கூடுதல் கட்டணமாக ரூ.195 சேர்த்து செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story