பள்ளி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை
பள்ளி மாணவி கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், விவசாயி. இவரது மகள் சரண்யா (வயது 16). இவர் நடுவலூர் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற சரண்யா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story