கன்னியாகுமரியில் குவிந்த கேரள சுற்றுலா பயணிகள்


கன்னியாகுமரியில் குவிந்த கேரள சுற்றுலா பயணிகள்
x

ஓணம் பண்டிகையையொட்டி நேற்று கன்னியாகுமரியில் கேரள சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் உற்சாகத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

ஓணம் பண்டிகையையொட்டி நேற்று கன்னியாகுமரியில் கேரள சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் உற்சாகத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இருப்பினும் விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவார்கள்.

இந்தநிலையில் கேரளாவில் புகழ்பெற்ற ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை விடுமுறையை கொண்டாட கேரள மக்கள் குமரி மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்தனர். கன்னியாகுமரிக்கு அதிகாலையிலேயே அவர்கள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். இதேபோல் ஏராளமான வட மாநில தொழிலாளர்களும் வருகை தந்தனர். அவர்கள் கடற்கரையில் திரண்டு ஆர்வத்துடன் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர்.

அதைத்தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

படகில் உற்சாக பயணம்

பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதைத்தொடர்ந்து படகில் உற்சாகத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்தனர்.

ஆனால், கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு இயக்கப்படும் உல்லாச படகுசவாரி நடைபெறவில்லை.

இதே போல விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன் கண்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story