சமயநல்லூர் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை, பணம் திருட்டு


சமயநல்லூர் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x

சமயநல்லூர் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை, பணம் திருடுபோனது

மதுரை

வாடிப்பட்டி,

சமயநல்லூர் அருகே பரவை சந்தோஷ் அவன்யூ குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிக்குமார் (வயது 54). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் தலைமை என்ஜினீயராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி பிரேமா (54). இவரும் தனது கணவருடன் தூத்துக்குடியில் வசித்து வருகிறார். பிரேமா வாரத்துக்கு ஒரு முறை பரவையில் உள்ள வீட்டுக்கு வருவது வழக்கம். அதன்படி நேற்று மாலை பிரேமா வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் முன்பக்க கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் தங்கச்செயின், ஆரம், தோடு, மூக்குத்தி, வளையல், மோதிரம், பிரேஸ்லெட் உள்பட 27 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். இதுகுறித்து பிரேமா கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story