ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு
அன்னவாசல் அருகே ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்தது.
புதுக்கோட்டை
அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலை பகுதியை சேர்ந்தவர் சாலை சக்கரபாணி. இவர் 4 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்தார். இந்தநிலையில் 21 வயதான ராமு என்ற ஜல்லிக்கட்டு காளை நேற்று உயிரிழந்தது. இந்த காளை 2008-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாமல் திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு காளையர்களை திணறடித்து பல்வேறு பரிசுகளை குவித்துள்ளது. நாட்டின காளையான ராமு இறந்ததை அறிந்த கிராமமக்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அந்த காளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஜல்லிக்கட்டு காளை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story