ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள்


ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள்
x
தினத்தந்தி 27 May 2023 6:45 PM GMT (Updated: 27 May 2023 6:46 PM GMT)

மானாமதுரை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் சீறி பாய்ந்தன

சிவகங்கை

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் சமயன சுவாமி கோவில் களரி திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகளை 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் அடக்கினார்கள்..

வெற்றி பெற்ற காளைகளுக்கும், சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு, சைக்கிள், அண்டா, பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 40 பேர் காயம் அடைந்தனர். அதில் 10 பேர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பெரும்பச்சேரி, மேட்டுமடை கிராமத்தினர் செய்திருந்தனர்.


Next Story