ராசிபுரத்தில் சித்தப்பா கொலை வழக்கில் கைதானதொழிலாளி சிறையில் அடைப்பு


ராசிபுரத்தில் சித்தப்பா கொலை வழக்கில் கைதானதொழிலாளி சிறையில் அடைப்பு
x
நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் எல்.ஐ.சி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற தங்கராஜ் (வயது 60), கூலித்தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் விஜயகுமார் (27). இவரும் கூலி வேலை செய்து வந்தார். தங்கராஜ், விஜயகுமாரின் சித்தப்பா ஆவார். சம்பவத்தன்று விஜயகுமார் மது அருந்திவிட்டு வந்து அவரது மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு பற்றி தங்கராஜ் கேட்டுள்ளார். இதில் குடிபோதையில் இருந்த விஜயகுமார் ஆத்திரம் அடைந்து அவரை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் விஜயகுமார் அடைக்கப்பட்டார்.


Related Tags :
Next Story