கந்திகுப்பம் அருகேகிணற்றில் ஆண் பிணம் மீட்புபோலீசார் விசாரணை


கந்திகுப்பம் அருகேகிணற்றில் ஆண் பிணம் மீட்புபோலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Aug 2023 7:30 PM GMT (Updated: 12 Aug 2023 7:31 PM GMT)
கிருஷ்ணகிரி

பர்கூர் :

கந்திகுப்பம் அருகே சின்ன ஓரப்பம் கிராமத்தில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான 80 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது. தற்போது 30 அடியில் தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் இதுகுறித்து ஓரப்பம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனுக்கு தகவல் கொடுத்தார். அவர் இதுதொடர்பாக கந்திகுப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story