பாப்பிரெட்டிபட்டி அருகேகடைக்கு சென்ற இளம்பெண் கடத்தல்?போலீசார் விசாரணை


பாப்பிரெட்டிபட்டி அருகேகடைக்கு சென்ற இளம்பெண் கடத்தல்?போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 July 2023 7:30 PM GMT (Updated: 29 July 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இது பற்றி பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் எங்கே சென்றார்? அவர் கடத்தப்பட்டாரா?அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story