கருவாடு காயவைக்கும் பணி தீவிரம்


கருவாடு காயவைக்கும் பணி தீவிரம்
x

கருவாடு காயவைக்கும் பணி தீவிரம்

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் பகுதிகளில் கருவாடு காயவைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீன்பிடி தொழில்

தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு தொடங்கி மல்லிப்பட்டிணம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டிணம், செம்பியன்மாதேவிபட்டிணம் உள்பட 34 மீனவ கிராமங்களில் 4,500 நாட்டுப்படகு மீனவர்களும், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 146 விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிதொழில் செய்து வருகின்றனர்.

இந்த படகுகளில் அன்றாடம் வரக்கூடிய இறால், நண்டு, மீன், கணவாய் போன்றவற்றை உடனடியாக விற்பனை செய்தும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இதில் கழிவாக கூடிய மீன்களையும், சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களையும் வாங்கி துறைமுகங்களிலேயே காயவைத்து கருவாடு விற்பனை தொழிலும் செய்து வருகின்றனர்.

கோழி தீவனத்துக்கு கருவாடு

உணவிற்கு பயன்படும் கருவாடுகளைவிட கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் சிறியவகை சங்காய வகை மீன்களுக்கு பெரும் வரவேற்புள்ளது. இவ்வகை மீன்களை மொத்தமாக வாங்கி காயவைத்து கிலோ 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கருவாடுகள் அனைத்தும் நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு கோழி தீவனத்திற்காக அனுப்பப்படுகிறது.

மல்லிப்பட்டிணம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய துறைமுகங்களில் மட்டும் கருவாடுகளை தரம்பிரிக்க, காயவைக்க, சாக்குமூட்டைகளில் கட்டி லாரிகளில் ஏற்றுவதற்கு என தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர்.

காயவைக்கும் பணி தீவிரம்

கடந்த ஒரு மாதமாக இந்த பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வெயில் இன்றி கருவாடு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினந்தோறும் வேலை செய்து வந்த 500-க்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவித்து வந்தனர். கடந்த ஒரு வாரமாக நல்ல வெயில் அடித்து வருவதால் தற்போது கருவாடு காயவைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story