நாமக்கல் அருகே சாலை விரிவாக்க பணிகளை அதிகாரி ஆய்வு


நாமக்கல் அருகே  சாலை விரிவாக்க பணிகளை அதிகாரி ஆய்வு
x

நாமக்கல் அருகே சாலை விரிவாக்க பணிகளை அதிகாரி ஆய்வு

நாமக்கல்

சென்னை- கன்னியாகுமரி தொழில்தட திட்டத்தின் கீழ் மோகனூரில் இருந்து நாமக்கல், சேந்தமங்கலம் வழியாக ராசிபுரம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணி மற்றும் புறவழிச்சாலை அமைக்கும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இத்திட்டத்தின் தலைமை பொறியாளர் செல்வன் ராசிபுரம் முதல் நாமக்கல் வரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பணிகளை தரமாகவும், விரைவாகவும் கொடுக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சசிகுமார் மற்றும் உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story