தேன்கனிக்கோட்டை அருகேலாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; 3 பேர் படுகாயம்


தேன்கனிக்கோட்டை அருகேலாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Sep 2023 7:30 PM GMT (Updated: 9 Sep 2023 7:30 PM GMT)

லாரி, மோட்டார் சைக்கிள் மோதி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

ஓசூரில் தளி சாலையில் உள்ள வேளாங்கண்ணி தனியார் பள்ளி அருகே வசித்து வருபவர் ரவி. இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் ஓசூரில் இருந்து அஞ்செட்டி நோக்கி சென்றனர். அப்போது தேன்கனிக்கோட்டை- அஞ்செட்டி சாலையில் உள்ள மரக்கட்டா வனப்பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ரவி, அவருடைய நண்பர் மற்றும் லாரி டிரைவர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் 3 பேரும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story