காய்ச்சல் முன் தடுப்பு பணிகள் தொடக்கம்


காய்ச்சல் முன் தடுப்பு பணிகள் தொடக்கம்
x

தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் முன் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் முன் தடுப்பு பணிகளை இளநிலை பூச்சியியல் வல்லுனர் கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள், கிராமப்புற செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பச்சையாபுரம், ராமலிங்கபுரம், கோட்டையூர், மேல தாயில்பட்டி, எஸ்.பி.எம்.தெரு உள்ளிட்ட தெருக்களில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.


Next Story