கும்பகோணத்தில், இந்திய மாணவர் சங்கத்தினர் சாலைமறியல்


கும்பகோணத்தில், இந்திய மாணவர்  சங்கத்தினர் சாலைமறியல்
x

கும்பகோணத்தில், இந்திய மாணவர் சங்கத்தினர் சாலைமறியல்

தஞ்சாவூர்

ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கும்பகோணத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியல்

கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், கட்டிடங்களை சீரமைத்து தரக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணைச்செயலாளர் பிரதீப், மாவட்ட குழு உறுப்பினர் ராகுல், நகர குழு உறுப்பினர் ஜேம்ஸ் மற்றும் விடுதி மாணவர்கள் கலந்துகொண்டு விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர பலமுறை வலியுறுத்தியும், அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை செய்யவில்லை என கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

நிறைவேற்றப்படும்

தகவல் அறிந்ததும் கும்பகோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட துறையுடன் பேசி உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மாணவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரி ஆதிதிராவிடர் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றால், ஒட்டுமொத்த கல்லூரிகளில் உள்ள மாணவர்களை திரட்டி தாசில்தார் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


Next Story