தமிழகத்தில் 39 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்- கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை


தமிழகத்தில் 39 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்- கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை
x

தமிழகத்தில் 39 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

மதுரை


மதுரை விமான நிலையத்தில் சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-

சனாதம் என்பது, சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை மட்டும் தான் கூறியிருக்கிறது. வடநாட்டில் இதற்கு வேற புரிதல் இருக்கலாம். சனாதனம் என்று கூறும் போது சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறிப்பாக சாதி ரீதியாக மக்களை மேல்தட்டு, கீழ்தட்டு என்று பார்ப்பதை தான் அது குறியிடுகிறது என்பது என்னுடைய புரிதல். இதை தான் ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மதச்சார்பின்மையை நாங்கள் பின்பற்றுகிறோம். தி.மு.க.வை சாதி அரசியல் கட்சி என்று என்னால் சொல்ல முடியாது. கலைஞரின் பலமே அவர் எந்த ஒரு சமுதாயத்தையும் அடையாளப்படுத்திக் கொண்டது கிடையாது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். காவிரி விவகாரத்தில், ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கு தேவையான கருத்தை எடுத்து வைப்பார்கள். அதுதான் இயல்பு. இது கூட்டணியில் பேசும் விஷயம் இல்லை. காவிரி ஆணையம், உச்ச நீதிமன்றம் இதற்கு தான் உள்ளது. இதில் போய் தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். தேர்தல் வரும் வரை தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை வாடிக்கையாக நடைபெறும். இதை வாழ்க்கையில் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்றார்.


Related Tags :
Next Story