நொய்யல் பகுதியில் வெற்றிலை விலை உயர்வு


நொய்யல் பகுதியில் வெற்றிலை விலை உயர்வு
x

நொய்யல் பகுதியில் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, புங்கோடை, முனிநாதபுரம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்திவேலூர் பழையதேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.8 ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது. 104 கவுளி கொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ.3,500-க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.800-க்கும் விற்பனையானது. உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story