தொடர் மழை: நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


தொடர் மழை: நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x

தொடர் மழையால் நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

நீலகிரி,

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. தொடர் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும், சாரல் மழையும் பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்பட்டால் 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மழை காரணமாக ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்து.

இந்த நிலையில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் விடுமுறை அறிவித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.


Next Story