திருவாரூரில், 1 கிலோ எலுமிச்சைப்பழம் ரூ.120-க்கு விற்பனை


திருவாரூரில், 1 கிலோ எலுமிச்சைப்பழம் ரூ.120-க்கு விற்பனை
x

திருவாரூரில், 1 கிலோ எலுமிச்சைப்பழம் ரூ.120-க்கு விற்பனை

திருவாரூர்

விலை உயர்வால் திருவாரூரில் 1 கிலோ எலுமிச்சைப்பழம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எலுமிச்சைப்பழம்

பழங்காலம் முதலே பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு எலுமிச்சைப்பழம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் எலுமிச்சை பயிரிடப்படுகிறது. எல்லா காலங்களிலும் எலுமிச்சைப்பழம் கிடைக்கிறது. கோடைக் காலங்களில் சர்பத் உள்ளிட்ட குளிர்பானம் தயாரிப்பதற்கு எலுமிச்சைப்பழம் பெரிதும் பயன்படுவதால் மற்ற காலங்களைவிட கோடைக்காலங்களில் இதன் தேவை அதிகமாக உள்ளது.

பல்வேறு சிறப்புகளை கொண்ட எலுமிச்சைப்பழம் விலை திருவாரூர் கடை வீதியில் கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது. சில்லறை கடைகளில் ஒரு பழம் ரூ.3 முதல் ரூ.5 வரை விற்பனை செய்யப்பட்டது. திடீரென ஏற்பட்ட விலை உயர்வால் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சைப்பழம் நேற்று ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.

மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு

அதேநேரத்தில் சில்லறை விற்பனை கடைகளில் பழத்தின் ரகத்திற்கு ஏற்றவாறு ஒரு பழம் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து எலுமிச்சைப்பழ வியாபாரிகள் கூறியதாவது:-

ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், சென்னை, ஒட்டன்சத்திரம், ஒசூர், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும் எலுமிச்சைப்பழங்கள் திருவாரூர் கடை வீதிக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் எலுமிச்சைப்பழம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வரத்து குறைந்து விட்டது. இதன் காரணமாக பழத்தின் விலை அதிகரித்து உள்ளது.

வெயில் காலங்களில் சர்பத் போன்றவற்றை செய்வதற்காக கடைக்காரர்கள் 4 கிலோ முதல் 5 கிலோ வரை வாங்கி செல்வார்கள். தற்போது 1 கிலோ வரை வாங்கி செல்கின்றனர். மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.


Next Story