போடியில் முதியவர் தற்கொலை


போடியில்  முதியவர் தற்கொலை
x

போடியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

தேனி

போடி புதூர் வலசைத்துறை ரோட்டை சேர்ந்தவர் முத்து (வயது 70). இவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை முத்து, வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னா் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி தேடி சென்றார். அப்போது ஆற்றங்கரை அருகே அரளி விதையை அரைத்து குடித்து மயங்கிய நிலையில் முத்து கிடந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி கனகவள்ளி கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story