தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.18½ கோடி சமரச தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.18½ கோடி சமரச தீர்வு
x

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 2,910 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.18½ கோடி சமரச தீர்வு காணப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 2,910 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.18½ கோடி சமரச தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 10 தாலுகாகளில் மொத்தம் 27 அமர்வுகள் முன்பு விசாரணை நடைபெற்றது.

நெல்லை கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான சந்திரா தொடங்கி வைத்தார். மேலும் அவர் தீர்வு காணப்பட்ட வழக்குகளில் உள்ள நிதியை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நீதிபதி சமீனா, கூடுதல் மாவட்ட நீதிபதிகள் பன்னீர்செல்வம், திருமகள், குடும்ப நல நீதிபதி குமரேசன், மகளிர் கோர்ட்டு நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நடுவர் மனோஜ்குமார், முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு கோர்ட்டு நீதிபதி மோகன்ராம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் சந்தானம், வள்ளியம்மா, மாஜிஸ்திரேட்டுகள் திருவேணி, ஆறுமுகம், விஜய்ராஜ்குமார், பாக்கியராஜ், அருண்குமார், முரளிநாதன் மற்றும் நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேசுவரன், செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரூ.18½ கோடி தீர்வு

இதில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல் வழக்கு, காசோலை மோசடி, சமரசமாக முடிக்க கூடிய குற்ற வழக்குகள் என மொத்தம் 6,314 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 2,639 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.15 கோடியே 76 லட்சத்து 40 ஆயிரத்து 922 சமரச தொகை வழங்கப்பட்டது.

மேலும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படாத தாவாக்களாகிய வங்கி கடன் வழக்குகள் 600 எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 271 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.2 கோடியே 74 லட்சத்து 43 ஆயிரத்து 203 சமரச தொகைக்கு முடிக்கப்பட்டது. மொத்தம் 2,910 வழக்குகளில் ரூ.18½ கோடிக்கு சமரச தொகையில் தீர்வு காணப்பட்டது.


Next Story