மேலவாஞ்சூரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்


மேலவாஞ்சூரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x

மேலவாஞ்சூரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூரை அடுத்த மேலவாஞ்சூர்-திட்டச்சேரி மெயின் ரோட்டில் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் பிணமாக கிடைப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் சிவப்பு நிற பனியனும், கட்டம் போட்ட கைலியும் அணிந்து இருந்தார்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ன விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story