சுந்தரேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா


சுந்தரேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா
x

சுந்தரேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா

திருவாரூர்

திருவாரூரை அடுத்த காட்டூரில் அபிராமி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் முடிவடைந்ததையொட்டி கடந்த 29-ந்தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. நேற்று காலை 6-ம் கால யாக பூஜைகள் நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவில் விமான கலச கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story