திமுக ஆட்சிக்கு வந்தாலே காவிரி பிரச்சினை வந்துவிடும் - டிடிவி தினகரன் பரப்புரை


திமுக ஆட்சிக்கு வந்தாலே காவிரி பிரச்சினை வந்துவிடும் - டிடிவி தினகரன் பரப்புரை
x

கோப்புப்படம் 

தமிழ்நாடு போதை பொருளின் சந்தையாக மாறிக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் பேசினார்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பாமக வேட்பாளரை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;

"திமுக ஆட்சிக்கு வந்தாலே காவிரி பிரச்சினை வந்துவிடும். பாலாற்றில் அணை கட்டுவோம் என்ற திமுக, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க முன்வரவில்லை. கர்நாடகாவில் உள்ள கூட்டணி கட்சிகளிடம் அணை கட்டுவது தொடர்பாக திமுக பேசவில்லை.

தமிழ்நாடு போதை பொருளின் சந்தையாக மாறிக் கொண்டிருக்கிறது. கஞ்சா போன்ற போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி கூலிப்படையாக மாறுகின்றனர். அனைத்து தரப்பினரையும் ஏமாற்றும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் திமுகவை வீழ்த்த மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்."

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story