இறுதியில் நீதியே வெல்லும் என்று நான் நம்புகிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்


இறுதியில் நீதியே வெல்லும் என்று நான் நம்புகிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
x

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவருடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

சென்னை,

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசி திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "ராகுல்காந்தி போன்ற ஒரு தலைவர் குற்றம் சாட்டும் மனதுடன் சொல்லாத கருத்துக்காக, அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் முன் எப்போதும் நிகழ்ந்திராத ஒன்று.

எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பாஜக இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுபோன்ற அட்டூழியங்கள் முடிவுக்கு வரும். சகோதரர் ராகுல் காந்தியுடன் பேசி எனது ஆதரவை தெரிவித்தேன். இறுதியில் நீதியே வெல்லும் என்று நான் நம்புகிறேன்!" என்று கூறியுள்ளார்.


Next Story