கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் கணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை


கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் கணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
x

திருப்பத்தூர் அருகே கர்ப்பிணி மனைவி இறந்த துக்கத்தில் கணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பெரியகரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள்.இவரது மகள் சங்கீதா (வயது18). இவரும் குனிச்சி அடுத்த பெரியார் வட்டம் பகுதியை மேகநாதன் (24) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய சங்கீதாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கீதாவை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணமாகி 4 மாதங்கள் மட்டுமே அவருடன் வாழ்ந்த சங்கீதா தன்னுடைய முன்னாள் காதலனை மறக்க முடியாமல் அவருடன் சேர்ந்து வாழ வீட்டை விட்டு ஓடி பெங்களூரு பகுதிக்குச் சென்று அவருடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் சங்கீதா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென சங்கீதாவிற்கு வலிப்பு வந்துள்ளது. உடனடியாக சங்கீதாவை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பெங்களூர் பகுதியில் கட்டிட வேலை செய்வதற்காக சென்றிருந்த கணவன் மேகநாதனுக்கு உறவினர்கள் போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.அதிர்ச்சி அடைந்த அவர் தன்னுடைய மனைவியை பார்க்காமலேயே மனம் உடைந்து திருப்பத்தூர் அடுத்த மொளகாரம்பட்டி ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மனைவியை இழந்த சோகத்தில் கணவனும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story