பேச்சிப்பாறை அணை புறம்போக்கு நிலத்தில் வசித்த 4 பேருக்கு வீட்டுமனை பட்டா;சப்-கலெக்டர் வழங்கினார்


பேச்சிப்பாறை அணை புறம்போக்கு நிலத்தில் வசித்த 4 பேருக்கு வீட்டுமனை பட்டா;சப்-கலெக்டர் வழங்கினார்
x

பேச்சிப்பாறை அணை புறம்போக்கு நிலத்தில் வசித்த 4 பேருக்கு வீட்டுமனை பட்டாவை சப்-கலெக்டர் வழங்கினார்.

கன்னியாகுமரி

தக்கலை,

பேச்சிப்பாறை அணை புறம்போக்கு நிலத்தில் வசித்த 4 பேருக்கு வீட்டுமனை பட்டாவை சப்-கலெக்டர் வழங்கினார்.

பட்டா

பேச்சிப்பாறை அணைப் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பலரும் வீடு கட்டி வசித்து வந்தனர், மழை காலங்களில் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதும், பின்னர் மீண்டும் அவர்கள் வசிப்பிடத்திற்கு வருவதுமாக இருந்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததன் பேரில் அங்கு வசித்தவர்களுக்கு 2018-ல் மாற்று இடம் வழங்கப்பட்டது.

அப்போது, அப்பகுதியில் பதினைந்து ஆண்டுகளாக வசித்து வந்த செல்லமுத்து, ஓமனா, அனிதா, ராஜையன் ஆகியோருக்கு மாற்று இடம் வழங்காமல் இருந்தது, அவர்கள் 4 பேருக்கும் பேச்சிப்பாறை சமத்துவபுரத்தில் தலா 2½ சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு அதற்கான இலவச வீட்டுமனை பட்டாவை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை வழங்கினார்.


Next Story