வீர, தீர செயல்புரிந்த பெண்கள் 'கல்பனாசாவ்லா' விருது பெற விண்ணப்பிக்கலாம்


வீர, தீர செயல்புரிந்த பெண்கள் கல்பனாசாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்
x

வீர, தீர செயல்புரிந்த பெண்கள் ‘கல்பனாசாவ்லா’ விருது பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2022-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வீர தீர செயல்புரிந்த பெண்ணுக்கு வழங்கப்படவுள்ளது. சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும். மேற்படி நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், ராஜா முத்தையா சாலை, பெரியமேடு, சென்னை-600 003 என்ற முகவரிக்கு தபால் மூலமாக வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-235633 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்படி விருது பெறுவதற்கு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வீர, தீர செயல்புரிந்த பெண்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story